ஒரு கட்டடம் கட்ட வேண்டுமானால் ‘ப்ளூப்ரிண்ட்’ எனப்படும் வரைபடம் அவசியம் என்பதை நாம் அறிந்ததே. அதுபோலவே ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கும் மீளாய்வு செய்வதற்கும் வரைபடங்கள் அவசியம். அத்தகைய சமூக வரைபடங்களே இஸங்கள் என்று அறியப்படுகின்றன. இதன்மூலம் நாம் வாழும் சமூகம் எந்த வரைபடத்தால் கட்டப்பட்டது என்பதை ஒரு மனிதன் தெரிந்துகொள்ள அவை உதவுகின்றன.