வேலையில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவரின் நடவடிக்கை மறுநாளில் இருந்து மாறுகிறது. மனைவி, மகள் , நண்பர்கள் எல்லோரும் அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். நடத்தையின் மாற்றத்துக்கு அவர் சொல்லும் காரணத்தை யாரும் ஏற்க மறுக்கிறார்கள். பிரச்சனை தீவிரமாகிறது. மந்திரவாதியில் இருந்து மருத்துவர் வரை வந்து செல்கிறார்கள். அவருக்கு என்ன பிரச்சனை? அவர் எப்படிச் சமாளிக்கிறார்? இறுதியில் என்ன ஆகிறது? என்பதை நாடக வடிவில் சொல்லி இருக்கிறார் சுஜாதா.