’ அகம் பிரமாஸ்மி’ - நமக்குள்தான் இறைவன் இருக்கிறான் என்ற பொருளை மட்டுமல்ல; நமக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த அனைத்து நல்லது
கெட்டதுகளைச் சீர்செய்து சமனாக்கும் சக்தியும் நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் சேர்த்துதார் சொல்கிறது!
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பெருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத்
தூண்டியே சீர்செய்ய முடியும் ! அதில் யோகம், தியானம், பிரணாயமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது!. இதை நமது முன்னோர்கள்
ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள் போல் கருதி, அந்தக் கலைகளைத்
தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்!. அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது அதிலும் மனிதர்களை
உயர்வுப்படுத்தும் - உறுதிப்படுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் ஜான் பி நாயகம்!