டாக்டர் பெ. போத்தி
மதுரை மாவட்டம், பாலமேடு என்ற கிராமத்தில் பிறந்தவர். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று மருத்துவப் பாடப்பிரிவில்
தங்கப்பதக்கம் பெற்றவர். 1963-ல் பட்டம் பெற்று அதே ஆண்டில் அரசுப் பணியில் சேர்ந்தார். உதவி இயக்குநராய் பணிநிறைவு பெற்றார்.
“ மனிதனைத் தொற்றும் விலங்கின நோய்கள்” , “ உடல் நலம் காக்க உன்னத வழிகள் “ , “ நிகழ்வுகளும் நியாயங்களும் “
போன்ற நூல்களை எழுதியுள்ளார். பல இதழ்களில் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன. இவருக்கு ‘ கவிபாரதி ‘ என்ற பட்டத்தை மதுரை கவிஞர்
பேரவை சூட்டியது.