இது நேரடி அனுபவங்களின் தொகை. ஆனால், வெறும் அனுபவங்களின் பகுதி அல்ல. உயிருள்ள பலரின் பெயர்களை மாற்றியிருக்கிறேன். இடங்களை மாற்றியிருக்கிறேன். தேவையானவற்றை மட்டும் சொல்லியிருக்கிறேன். அனைத்துக்கும் மேலாக இதில் ஒரு புனைவு உள்ளது. அனுபவங்களின் வழியாக நிகழ்ந்த அகத்திறப்பை மையமாகக் கொண்டு மொத்த அனுபவங்களையும் மறுதொகுப்பு செய்வதற்கு அந்தப் புனைவு பயன்பட்டுள்ளது.