ரொலாண் பார்த், ஆசிரியனின் மரணம் என்னும் கோட்பாட்டை அறிவித்ததன் மூலம் எழுத்தாளர்களின் எதிரியாக மாறியவர். புனைவுக்கும் புனைவற்ற எழுத்துகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைத் தகர்த்தவர். ஒரு நாவல்கூட எழுதாத, ஆனால் தன்னை ஒரு புனைகதை எழுத்தாளன் என்று அழைத்துக்கொண்ட நூதன மனிதர். இவருடைய கட்டுரைகள் இவரை கட்டுரையாளர் - என்ற நிலையிலிருந்து உயர்த்தி, ஓர் எழுத்தாளராகவே அடையாளம் காட்டுகின்றன. எம்.ஜி. சுரேஷ், பார்த்தின் வாழ்க்கை மற்றும் அவருடைய பிரதான சிந்தனைகளான ஆசிரியனின் மரணம்', "இரண்டாவது வரிசை அர்த்தம்'. 'பிரதி தரும் இன்பம் போன்றவற்றை இந்தச் சிறு நூலில் அறிமுகம் செய்திருக்கிறார். மேலும் பார்த்தின் கருத்துகளுக்கு எதிராக எழுந்த மாற்றுக் கருத்துகளை பார்த்தின் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பரிசீலனையும் செய்திருக்கிறார்.