1942ல் தினத்தந்தி தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழஙகத் தீர்மானித்து, “ வரலாற்றுச் சுவடுகள்”
என்ற தலைப்பில் “ தினத்தந்தி” யில் நெடுந்தொடராக வெளியிட்டோம். அபூர்வ புகைப்படங்களுடன் வெளியான இத்தொடர், வாசகர்களிடம்
மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
” வரலாற்றுச் சுவடுகள் “ தொடரைப் புத்தகமாக வெளியிட்டால், அனைவரும் படிக்கவும், பாதுகாக்கவும் வசதியாக இருக்கும் என்று வாசகர்கள்
தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களின் விருப்பத்துக்கிணங்க புத்தகமாக வெளியிடுகிறோம்.