இந்நூல் பல விதங்களில் சிறப்புப் பெறுகின்றது.விடுதலைப் போராட்டக் களமாடிய 56 வீரர்களின் வீரம் சுருங்கச் சொல்லப்படுகின்றது.இதில் 38 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.ஒன்பது பேர் இஸ்லாம் சமயத்தவர்.இருவர் கிறிஸ்துவர்கள்.ஒருவர் அயல் நாட்டவர்.ஒன்பது பேர் பெண்கள். இந்தச் சேர்மானம் தான் இந்திய தேசியமாக உருவெடுத்து,காந்தியமும்,பொதுவுடமையும் இதற்கு வலுவூட்டின.இந்தப் பன்மைத் தன்மை,கூட்டுறவு,ஒற்றுமையுணர்வு தான் இந்திய விடுதலையைச் சாத்தியப் படுத்தியது.
இதுவரை பொதுவெளியில் கவனம் பெறாத பலர் இந்நூலில் சிறப்பாக முன் மொழியப்பட்டுள்ளனர்.வாழ்க்கை வரலாற்று நூல்கள் வரிசையில் இந்நூல் நிச்சயம் கவனம் பெறும்.