இப்புத்தகம் முதன்முதலாக 1937-ல் வெறும் ஐந்தாயிரம் பிரதிகளுடன் பிரசுரிக்கப்பட்டது. டேல் கார்னிகியோ அல்லது அவரது பதிப்பாளர்கள் சைமன் மற்றும் ஷூஸ்டரோ இதற்கு அதிகமான விற்பனையை எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒரே இரவில் இப்புத்தகம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் பல பதிப்புகள் வெளியிடப்பட்டதும், அவர்களைப் பெரும் வியப்பிற்கு ஆளாக்கியது. இன்றளவும் அந்த வியப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.