வைக்கம் முகம்மது பஷீர் என்ந படைப்பாளுமையின் இருவேறு முகத்தோற்றங்களைக் காட்டுகிறது இந்நூல். 'ஆனைவாரியும் பொன்குருசும்' என்ற நெடுங்கதையும் செவிசாய்த்துக் கேளுங்கள், அந்திமப் பேரோசை' ஆகிய நீண்ட உரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. பஷீர் கதைகளில் மிகவும் விநோதமும் தீவிர நகைச்சுவையும் கொண்ட கதை இது. பஷீர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் மிகவும் நீண்டதும் தீர்க்கமானதுமான உரை இது.
கதையில் ஊடாடும் கட்டுரைத்தன்மையும் உரையில் பளிச்சிடும் கதைக் கூறுகளும் இவற்றை ஒன்றிணைத்துப் பார்க்க உதவுகின்றன. அவை பஷீர் என்ற ஆகச் சிறந்த கதைசொல்லியின் ஆற்றலை அடையாளம் காட்டுகி்ன்றன. இன்றும் புதுமை கலையாத கதை; இன்றைக்கும் பொருந்தக் கூடிய உரை.