ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு திரைப்படங்களும் ஏழு புனித நூல்கள் எனச் சொல்வது மிகையான கூற்றாகாது. வேறு யாருடனும் ஒப்பிட முடியாதவர் தார்க்கோவஸ்கி.அவரிடம் வெளிப்படும் ஆழ்ந்த ஞானம்,இலக்கியம்,இசை,ஓவியம் போன்ற மற்ற கலைகள் மீதான ஈடுபாடுயெல்லாம் மேலான இடத்தில் அவரை அமரவைக்கின்றன.