வா.மு.கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமுகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கு மேற்கே பன்னிரண்டு
கிலோமீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 90 - களில் திருப்பூரில் இருந்து நடுகல் என்கின்ற சிற்றிதழைக் கொண்டு
வந்து பரவலான கவனத்தைப் பெற்றார். பல்வேறு சிற்றிதழ்களில் பல சிறுகதைகளை இன்று வரை எழுதி வருகின்றார். கள்ளி, சாந்தாமணி, எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் நாயுருவி, மரபல்லி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, சகுந்தலா வந்தாள் என்கின்ற நாவல்களை இதுவரை எழுதி வெளியீட்டுள்ளார், சிறுகதைத் தொகுப்புகள் மண்பூதம் சேகுவேரா வந்திருந்தார், தவளைகள் குதிக்கும் வயிறு ஒரு பிற்பகல் மரணம் பிலோமி டீச்சர், தவிர கவிதை தொகுதி சொல்லக்கூசும் கவிதை என்றும் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோமுவின் பால்யகாலக் கொண்டாட்டங்கள் அந்த காலக்கட்டதிற்கேயான துள்ளல்கள் இந்த புத்தகத்தில் நினைவோடைக் குறிப்புகளாக நிரம்பி வழிகின்றன இது வா.மு.கோமுவின் வாசகர்களுக்கான விருந்து!.
No product review yet. Be the first to review this product.