“விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார்.இதில் அவர் கோடி விஷயங்களைச் சொல்லிவிடுகிறார்.நீதிக்கதைகளின் அழகே அதுதான்.நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது.
விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது;மரம் இருக்கிறது.இதுதான் கடவுளின் பேரரசு.இதுவே விண்ணரசு.அதை எங்கோ தேடுகிறீர்கள்;வேதனைப்பட்டுத் தேடுகிறீர்கள்.
கடவுளின் பேரரசை நீங்கள் காண விரும்பினால்,நீங்கள் விதையாக மாறி அழியவேண்டும்.அப்போது சட்டென மரம் தோன்றிவிடும்.நீங்கள் இருக்கமாட்டீர்கள்.ஆனால்,கடவுள் இருப்பார்.
நீங்கள் சிறையாகிவிட்ட விதைகள்.புத்தர் ஒரு விதை.இயேசு ஒரு விதை.ஆனால்,அவர்கள் சிறைகளாகி விடவில்லை.வித்தும் ஓடும் தகர்ந்து மரமானவர்கள்.