அருட்பெருஞ்ஜோதி
இறுக்கமான சூழல் சமூகத்தில் நிலவும்போதெல்லாம் யாரோ ஒரு மகான் அவதரித்து, மக்களுக்கான மார்கத்தை உணர்த்துகிறார். அப்படி ஒரு சூறாவளியாக அவதரித்தவர்தான் வள்ளலார். துன்பங்ளில் சிக்கித்தவிக்கும் மக்களைக் கைதூக்கி விடுவதுதான் வழிபாட்டின் பலன் என்பதை உணருந்திருதவர். ‘பசியோடு இருக்கும் ஒருவருக்கு கல்வி புகட்ட முடியது, என்பார்கள் ஆசிரியர்கள். ‘பசியில் தவிப்பவருக்கு கடவுளே எதிரில் வந்து நின்றாலும் கும்பிட்த்தோன்றாது. என்ற உண்மையை உணர்த்திய ஞானசிரியர் அவர். பசியை ஒரு பிணி என்றார் அவர்;அந்தப் பசிப்பிணி போக்குவதற்கு அவர் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.... பல வயிறுகளில் எரியும் பசித்தீயை ஆற்றிக் கொண்டிருக்கும் அந்த அணையா நெருப்பின் சுடர் பற்றி அவர் வாழ்வைப் படிப்போம்... வாருங்கள்.