’உன்னையே நீ அறிவாய்’ என்பார் ஸாக்ரெட்டெஸ், புத்தரும் உன்னைத் தெரிந்துகொள் என்கிறார். இருவரையும் தவறாய் புரிந்துகொண்டார்கள்.புத்தரோ உள்ளே யாருமில்லையென்பதைத் தெளிவாகவே சொல்லிவிடுகிறார். பார்ப்பது என்ற நிகழ்வு இருக்கிறது. பார்ப்பவர் என்று யாருமில்லை. புரிதல் இருக்கிறது. புரிந்துகொள்பவர் யாருமில்லை. தெரிந்துகொள்வது இருக்கிறது. தெரிந்துகொள்பவர் யாருமில்லை.இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.