அசோகமித்ரனின் ‘ இன்று ‘, எமர்ஜென்சி காலத்து இந்தியச் சூழலை நினைவுபடுத்தும் நாவலாகத் தோன்றினாலும், எந்தக் காலத்து
‘இன்று’வ் வுடனும் தொடர்புபடுத்திப் பார்த்து வியக்கும் சாத்தியங்கள் இதில் அநேகம்.
இந்நாவலின் கட்டமைப்பு தமிழ்ச்சூழலுக்கு முற்றிலும் புதிதானது. சொற்பொழிவுகளாகவும் கட்டுரை வடிவிலும் கதையோட்டமாகவும்
கவிதையாகவும் விரிந்தாலும் நாவலின் மையப்புள்ளி மிகச் சுலபமாக அடையாளம் காணக்கூடியதுதான்.
மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட நாவலான ‘ இன்று ‘ இது காறும் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களுள் ஒன்று என்று எப்போதும்
நினைவுகூரப்படுவது.
இன்றைய நவீன தமிழ் நாவல்கள் அனைத்துக்கும் இதுவே முன்னோடி.