கி.ராஜநாராயணனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் கதைசொல்லி என்ற எண் வழிச் சிற்றிதழின் மூன்றாவது பாகம் இந்நூல்.இதில் வழக்கமான கி.ராவின் கட்டுரைகள்,நாட்டுப்புறவியல் சார்ந்த பதிவுகள்,நாட்டுப்புறக் கதைகள்,சிறுகதைகள்,கட்டுரைகள்,ஆய்வுக்கட்டுரைகள்,மொழிபெயர்ப்பு கதைகள்,கடித இலக்கியப் பகுதிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.இத்தொகுப்பு நூலை ஒரு சேர வாசிக்கும் போது ஒரு கதம்பமாலையை நுகர்ந்து பார்த்த அனுபவம் வாசகர்களுக்கு ஏற்படும்.தரமான ஒரு இலக்கிய நூலை வாசித்த மகிழ்வும் ஏற்படும்..