தமிழ்ப் பண்பாட்டில் ஆழ வேர்விட்டுச் செழித்த சமயங்களில் ஒன்று சமணம்.சமணம் பற்றிய நுண்ணாய்வுகள் நம் சொந்த பண்பாட்டை விளங்கிக் கொள்வதற்கு அடிப்படைகளாக அமைபவை.இந்த வகையில் சமணம் பற்றி மூலாதாரமான பல்வகைச் சான்றுகளை ஒருங்கு திரட்டி ஆழமும் விரிவும் கொண்ட நுண் ஆய்வாக இந்நூல் விளங்குகிறது.
புலவர் செ.இராசு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல்,தொல்லியல் துறையில் பேராசிரியராக,துறைத்தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்;இப்போது ஈரோட்டில் வசித்து வருகிறார்.தமிழ் வரலாற்றுக்குத் தேவையான கல்வெட்டுகள்,செப்புபட்டயங்கள் முதலான மூலாதாரச் சான்றுகளை நுணுக்கமும் இளக்கமும் கொண்ட பதிப்புகளாக வெளியிட்டவர்.இப்போது கொங்கு வட்டார இலக்கியமாஅன அண்ணன்மார் சாமி கதைப்பாடலுக்கு செம்பதிப்பை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.