மதுரைத் தமிழ்ப் பேரகராதி (பாகம் 1 - 2)
பள்ளிக்கூடத்திற் படிக்கும் மாணாக்கர்கள் முதல், பெரிய வித்துவான்கள் வரை யாவரும் தமக்கு இன்றியமையாத துணையாகக் கொள்ளுதற்குரியது அகராதி. இதுகாறும் வழங்கிவந்த அகராதிகளிற் காணப்படாத பல புதிய அமைப்புகள் இதில் உள்ளன. பல புதிய சொற்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல அறிஞர்களுடைய துணைகொண்டு இது தொகுக்கப் பெற்றது. தமிழ் மாணாக்கர்களும், புலவர்களும், பிறரும் இவ்வகராதியாற் பெரும்பயன் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
முந்தைய பதிப்பின் முன்னுரையில்
(உ.வே. சாமிநாதையர் முன்னுரையுடன்)