Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

எம்.ஜி.ஆர் பதில்கள்

(0)
mgr bathilgal
Price: 100.00

Weight
290.00 gms

கேள்வி:தாங்கள் சுயநலத்திற்காக உதவி செய்வதற்காக் கூறுகிறார்களே,அதுபற்றி உங்கள் பதில்.........!

உதவி செய்வது மனிதனின் கடமை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம்.ஆனால் ஒரு தனி மனிதன் பிறருக்குத் தான் உதவி செய்வதாக எப்போது நினைக்கிறானோ அப்போதே அதி உதவி என்று ஆகிவிடுகிறது.ஆகவே நினைக்கக் கூடாத ஒன்றை என் உள்ளத்தில் தோற்றுவித்து,எனக்கும் பிறருக்கும் பயன்படாத ஒருவனாக என்னை உருவாக்க ஏன் விரும்புகிறீர்கள்?சுயநலமற்ற ஒரு மனிதன் இருக்கிறான் என்பதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.மகாத்மா காந்திக்குக் கூட சுயநலம் இருந்ததுண்டு.அவருடைய லட்சியத்தை அடைய முயன்றதில் அவரைவிடச் சுயநலக்காரர் உலகிலேயே வேறு யாரும் இருந்திருக்க முடியாது.அதனால்தான்  ‘தேசப் பிதா’(இந்தியத் தந்தை) என்ற என்ற பட்டத்தை மக்கள் அவருக்கு சூட்டி இருக்கிறார்கள்.அவ்வளவு பெரிய சுயநலம் எனக்கு இல்லாவிட்டாலும்,அப்படிப்பட்ட தகுதியை நான் பெறாவிட்டாலும் என் அளவிற்கு,குருவிகூட்டிற்குள்ளே மிகப்பெரிய வாழ்க்கை இன்பத்தைக் காணும் சிட்டுகள் போல,நானும் என் சிறிய இதயக் கூட்டுக்குள் சிறிதேனும் சுயநலம் கொள்ளாமல் இருக்க முடியாது.ஆனால் அது எப்படிப்பட்ட சுயநலம் என்பதை முடிவுகட்டும் உரிமையை உங்களுக்கே அளித்துவிடுகிறேன்.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.