தமிழ் சமூகத்தில் பிறந்தோ, வாழ்ந்தோ தம் காலத்துக்கும் வாழ்வுக்கும் சமூகம்,அரசியல்,கலை, இலக்கியம், கலாசாரம், சிந்தனை ஆகிய தளங்களில் வளமான பங்களிப்புகள் செய்தும் உரிய கவனிப்பப் பெறாது போய்விட்ட சில இலட்சிய மனங்கள் பற்றிய கச்சுரைகள் இவை.
தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குத் தம் வாழ்வை முழு முற்றாக ஒப்புக்கொடுத்து, அயராது பணியாற்றி, அத்துறகளை வளப்படுத்திய ஆளுமையாளர்கள் இவர்கள். இவர்களுடைய அர்பணிப்பு, உத்வேகம், உழைப்பு ஆகியவற்றின் அருமையை நாம் உணர்ந்து போற்ற வேண்டும்: சுவீகரிக்க வேண்டும்.