நடந்ததைப் பற்றியும் நடக்கப் போவதைப் பற்றியும் கவலைப் படுவதினால் வெற்றி நமக்கு கரிசனம் காட்டாது.மனம் எப்போதும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே ஊஞ்சலாட்டம் அமையும்.
மனதை நிம்மதியாக மாற்ற நாம் இன்னொருவரை நாடுவது யாசகம் கேட்பதுபோல் இருக்கின்றது.மகிழ்ச்சி அனைத்தும் நம்முள்ளே இருக்கிறது.இருந்தும் நாம் வெளிப்படுத்தத் தயங்குவதேன்?
சின்னச் சின்ன விஷயங்களுக்கும்,மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு இருந்தால் சந்தோஷம் என்பது வார்த்தையாக மட்டுமே இருக்கும்.
சின்னக் குழந்தை கொடுக்கும் மகிழ்ச்சியை எவ்வளவு காசு கொடுத்தாலும் விலைக்கு வாங்கிவிட முடியாது.இந்தப் புத்தகம்,பணத்தை முன்வைத்து மகிழ்ச்சியை வாங்க முடியாது மாறாக மனதை முன்வைத்து உங்களை சந்தோஷமாக்குகின்ற ஒரு சிறிய முயற்சியே..