ஆனந்தத்தை அடைவதற்க்கு சிலர் அன்பு என்ற வாகனத்தில் ஏறுகிறார்கள். சில நேரங்களில் அந்த வாகனம் ஆனந்தத்தின் எல்லைக் கோடுகளை தொடுகிறது. எனவே அது ஆனந்தம் நோக்கி அழைத்துச் செல்லும் என்று காத்திருக்கிறார்கள். காலப்போக்கில் அந்தக் காத்திருப்பு ஆனந்தத்தைத் தருவதில்லை... அவஸ்தையைத்தான் தருகிறது.