இந்நூல் தமிழ் இலக்கியப்பரப்பில் புதுவரவு.
தமிழாய்வினைப் பிறதுறைகள் வழியே காணும் போக்கினைத் தொடக்கியவர் பேரா.ச.வையாபுரிப் பிள்ளை ஆவார்.பேரா.ச.வையாபுரிப் பிள்ளை,முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம்,பேரா.இராம.சுந்தரம் என்ற ஆய்வுப் பாரம்பரியத்தில் வரும் இவருடைய இந்நூல் பிற துறைகள் வழியே தமிழினை ஆய்கிறது.பாதிரிமார்களும் ஆங்கிலேய அலுவலர்களும்,முன்னெடுத்த இவ்வாய்வு இன்றைக்கும் அய்ந்தாம் தலைமுறைக்கும் வந்துள்ளது.இதனை அடுத்த தலைமுறைக்குக் கவனமாக நகர்த்த வேண்டும்.