இக்கதைகள் சமகாலத்தின் முகச்சாயலுடன் உள்ளன.அதே தருணம் வாழ்வின் நிலைத்த அன்பு நிரூற்றை வாரி இறைக்கின்றன.கதைத் தேர்வும்,வழங்கல் முறையும் கைகூடிய இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை நெடும்பரப்பில் கவனிக்கத்தக்கவை.தனக்கெனத் தனித்ததொரு தடத்தில் பயணிக்கும் ஜி.சரவணன் நவீனத்தமிழுக்கு நல்வரவு.தஞ்சையின் திண்ணைகளிலிருந்து கொல்லைப்புறங்களை காட்டி இருக்கும் இவர் பாராட்டுக்குரியவர்.