சமகாலத்தில் தமிழில் மிக காத்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும் பதினாறு நவீன கவிஞர்களின் படைப்புகளில் வெளிப்படும் கவித்துவம், குறியீடுகள், சமூகத்தின் மீதும், சக படைப்புகள் மீதும் அது நிகழ்த்தும் உரையாடல்களை தனக்கே உரிய தனித்துவத்தோடு அறிமுகப்படுத்துகிறார் கவிஞர் விக்ரமாதித்யன். கவிதைகள் குறித்த போக்குகளை விளங்கிக்கொள்ள உதவுகிறது இந்த நூல்.