நவீனத் தமிழின் முன்னோடி எழுத்துக் கலைஞரான புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’, ‘துன்பக்கேணி’ ஆகிய இரு கதைகளை சென்னைப் பல்கலைக் கழகம் 2014இல் தனது பாடத் திட்டத்திலிருந்து நீக்கியது.துன்பக்கேணி தலித்துகளைஅவமதிப்பதாகவும் அக்கதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவே பல்கலைகழகத்தின் மேற்படி நடவடிக்கைக்கு தூண்டுதலாக அமைந்தது.