சங்க இலக்கிய உரைகள்
பழந்தமிழ் கவிதைகளின் இடைக்கால வாசிப்பு முறைகள்
அகம் புறம் என்னும் தமிழ் மரபும் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் வடமொழி மரபும் உரையாசிரியர்கள் மூலம் எவ்வாறு இணைகின்றன?
பெயறிடப்படாத உரைகளை அதன் பதிப்பாசிரியர் ஏன் பழைய உரை எனப் பெயரிட்டனர்?
திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் ஏன் திருமுருகாற்றுப்படைக்கும் உரை எழுதினர்?
சங்க இலக்கிய வாசிப்பு என்பது இடைக்கால உரையாசிரியர்களால் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது. போன்ற கேள்விகளுக்கான பதில்களை விரிவான ஆதாரங்களுடன் முன்வைக்கின்றது இந்தநூல்.