சாவித்திரி கலைகளின் ஓவியம்
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை எல்லொருக்கும் வரலாறாகவோ, காவியமாகவோ, ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர்தான் நம் ‘ நடிகையர் ‘ திலகம்’ சாவித்திரி அவர்கள். அவரது வாழ்க்கை வரலாறுதான் ஒரு காவியமாய் மலர்ந்திருக்கிறது.
‘ நிமிர்ந்த நன்னடையுடன்
நேர்கொண்ட பார்வையும்
ஞாலத்தில் உஆருக்கும்
அஞ்சாத நேர்மையும் ’
கொண்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் சாவித்திரி.