சாயாம் – பர்மா மரணஇரயில் பாதைமறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு
சீ. அருண் 1985 – ஆம் ஆண்டு முதற்கொண்டு எழுதி வருகின்றார். ஆய்வுக்கட்டுரை, இலக்கியக்கட்டுரை, சிந்தனைக்கட்டுரை, உரைவீச்சு, சிறுகதை எனப் பல்வகை இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்.
‘ கண்ணாடி சிதறல்கள் ‘, ஒரு கவிதை காதலாகின்றன ‘ மரண இரவுகள் ‘ முதலிய தலைப்புகளில் உரைவீச்சுத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். வரலாற்று ஆய்வியல் கட்டுரைகள் பல எழுதிய பட்டறிவு கொண்டவர்.மலேசியா, தமிழகம், பிரான்சு, நோர்வே, ஜெர்மன், ஆஸ்திரேலியா, கனடா முதலிய நாடுகளில் இருந்து வெளிவரும் இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. செம்பருத்தி திங்களிதழில் கடந்த ஜந்து ஆண்டுகளாக மொழியின் முகங்கள் எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளும், ‘ஓர் ஆலிம் வேர் தேடி’ எனும் தலைப்பில் வரலாற்றுகுறிப்புகளையும் எழுதிவருகின்றார்.
2007- ஆம் ஆண்டு ஜீன் திங்கள் 24- ஆம் நாளன்று மலேசியத் தமிழர் எழுத்தாளார் சங்கம் கட்டுரைத்துறைக்கான ஆதிநாகப்பன் இலக்கியப் பரிசினை இவருக்கு வழங்கிச் சிறபித்த்து. பல்கலைக் கழகங்களும் பொது இயக்கங்களும் நட்த்தியப் போட்டிகளில் பலவற்றில் பரிசில்கள் பெற்றுள்ளார்.
சயாம்- பர்மா தொடர்வண்டிப்பாதை தொடர்பாக, சில ஆண்டுகள் ஆய்வினை மேற்க்கொண்டு இந்நூலை வெளியிடுகின்றனர்.