சிறைக் கொட்டடியிலிருந்த பொதுவுடைமைவாதிகள் அடக்குமுறையும் அரசையும் எதிர்த்து நடத்திய எதிர்வினைகளின் எழுச்சிமிக்க பதிவே இந்நூல்.
சுதந்திர இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் தடைவிதிக்கப்பட்ட தருணத்தில் நிகழ்ந்த பல போராட்டங்களில் கைதான தொழிற்சங்கவாதிகள்
சிறைகளில் அடைக்கப்பட்டனர்.வேலூர் சிறையினுள் அதிகாரிகளை எதிர்த்த போராட்டம் கலவரமானதையும் , சிறையறைக்குள்ளேயே கடுமையான
தாக்குதலுக்கு ஆளானதையும் சொல்வதுடன் உண்ணாவிரதம், ஆர்பாட்டம் எனத் தொடர்ந்த உணர்ச்சிப் பெருக்குகளின் அரிய பதிவு நூல்.