சிலைகளைக் கொள்ளை கொடுத்த கோயில்களுக்கு நேரடியாகச் சென்று, எப்படி கொள்ளை நடந்திருக்கிறது. எப்படிக் கடத்தப்பட்டது என்பதையெல்லாம் புலனாய்வு செய்து விறுவிறுப்பான நடையில் தொடரை எழுதியிருக்கிறார். தோண்டத் தோண்ட ரகசியங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன. தம்பி லெனின் எழுதிய ‘சிவன் சொத்து’ தொடரை நூலாக வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.