புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவன் ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கிறான். அந்த நூலகத்தின் ஒவ்வோரு அறையும் ஒரு மாய உலகம் போன்றிருக்கிறது. ஆடு, முயல், மீன் என அங்கே புத்தகம் படிக்கும் விலங்குகள் ஒவ்வொன்ரும் நாம் ஏன் புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்க்கு விசித்திரமான காரணங்களைக் கூறுகின்றன.
மாய நூலகத்தில் ஒரு அரிய பரிசு கிடைக்கிறது. அதைக் கொண்டு நந்து என்ன செய்தான் என் நீள்கிறது இந்த நாவல்.
ஒரு நூலகத்தினுள் இத்தனை விசித்திர உலகஙள் இருக்கிறதா என வியப்படைய வைப்பதே இந்நாவலின் தனித்துவம்