நூலின் பெயர்: தலையில்லாத பையன்
பெயர்:எஸ்.ராமகிருஷ்ணன்
தலையில்லாமலே ஒரு பையன் பொறந்திருவானாம். …பாவம், அவங்க அம்மா சாமியார் கிட்டப் போய்க் கேட்டா அவரு ஏதோ மந்திரம் போட்டு வேர் ஒண்ணு எடுத்துக் கொடுப்பாராம். பன்றித் தலை கிடைக்குமாம். பார்க்கிற இளவரசி கோபப்பட்டுப் பிச்சிப் போடுங்கடா அவன் தலைய அப்படீனு சொல்லிடுவாளாம்.. அப்புறம் கழுதைத் தலை கிடைக்குமாம். பதினைந்து வயதாகும்போது இளவரசி கண்ணில் பட்டு, அந்தத் தலையும் போயிருமாம். அப்புறம் சாமியார், சரி, மனுஷன் தலையே கிடைக்க வைக்கிறேன், ஆனா அழகான முகம் இருந்தா அறிவு இருக்காது, அறிவு வேணும்னா அசிங்கமான மூஞ்சி தான் கிடைக்கும் என்ன சொல்லு அப்படீனு கேப்பாராம். அவங்க அம்மா, சாமி அழகான முகமே இருக்கட்டும்னுடுவாளாம். இப்ப கேளுங்க கூத்தை…இளவரசி இவனைப் பாத்து மயங்கி இவனைத் தான் கட்டிக்குவேன்னு சொல்லிடுவாளாம். அறிவில்லாத ராஜா தன்னை மாதிரியே இருக்கும் இவனையே இளவரசிக்குக் கட்டி வச்சி ராஜா ஆக்கிடுவாராம்…ஹா ஹா ஹா…ஜோரா இருக்குல்ல.
இன்னும், அறிவுக்குத் தீனி போடுற கதை. உயிர்க்காட்சி சாலையில் கூண்டுக்குள்ளே தவிக்கும் ஒட்டகத்தோட, சிவிங்கியோட சோகக் கதை, சுயநலமும், சந்தேக புத்தியும், அடுத்தவங்கள மதிக்காத தன்மையும் கொண்ட மனிதர்களிடையே வாழப் பொறுக்காத மனிதக் குரங்கின் கதை….அப்புறம் வெட்டிச் சண்டைக்கு உயிரை விடும் அண்டை வீட்டுக்காரங்க கதை…ரொம்ப நன்றி
Book Name: Thalayillatha Paiyan
Book Writer:S.Ramakrishnan
Buy Book:This Tamil Book Available
No product review yet. Be the first to review this product.