சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள்,முரண்பாடுகள்,விசித்திரங்கள்,பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார கருதியாக இருக்கின்றன.வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய ‘நகரம்’, ‘பார்வை’, ‘ரேணுகா’, ‘எல்டொராடோ’, ‘கால்கள்’, ‘தீவுகள் கரையேறுகின்றன’ உள்ளிட்ட பல முக்கியக் கதைகள் அடங்கியது இத்தொகுப்பு.வாழ்வின் சில ஆதார குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச் செல்லும் இக்கதைகள் காலமாற்றத்தால் புதுமை குன்றாதவை.