நிலம்,நீர்,நெருப்பு,காற்று விசும்பு (ஆகாயம்) எனப்படும் ஐந்து பருப்பொருட்களில்,அதாவது பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம் எனப்படும் ஐம்பெரும் பூதங்களில் ஒவ்வொன்றும் சமஷ்டி,வியஷ்டி என இரு பாகங்களாகி இரு பூதங்களாயிற்று.சமஷ்டி என்றால் ஒன்றாயிருத்தல்.இதற்கு உதாரணம் தோப்பு.வியஷ்டி என்றால் வெவ்வேறாக இஉத்தக்,இதற்கு உதாரணம் மரம்.இவற்றில் முதல் பாகப் பஞ்ச பூதங்களே பிரபஞ்சமாயிற்று.இரண்டாவது பாகப் பஞ்சபூதங்கள் இருபத்தைந்து தத்துவங்களாகி,அவை ஒன்று சேர்ந்து மனித உடல் உண்டாயிற்று.