இன்றைய மோடி அரசுக்கு முந்தைய எந்த அரசும் பகுத்தறிவையும் நியாயங்களையும் இந்த அரசைப்போல கைவிட்டதில்லை.அடல்பிகாரி வாஜ்பேயிகூட ‘உறுப்புமாற்று மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை நாம் அறிந்திருந்தோம் என விநாயகர் காட்டுகிறார்’என்றோ, ‘பறக்கும்தட்டு பிரச்சனைபற்றி அறிவியல் மாநாட்டில் அறிமுகப்படுத்துவார்’ என்றோ என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.
பகுத்தறிவு மற்றும் நியாயங்களில் மீதான தாக்குதல் பாசிசம் செய்வதாகும்.பாசிசத்தின் வரலாறு முழுவதிலும் தேசத்தை புகழ்வது என்ற பெயரால் பிளவுபடுத்துதல் மற்றும் நியாயங்கள் மீது தாக்குதல் என்ற இரண்டு பெரிய செயல்கள் நடந்து வந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.