தெற்கே தரங்கம்பாடி-நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சி செய்தவர் மாமன்னர் ஒளரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஒளரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஒளரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்கு பாடம் நடத்தியிருக்கின்றன.
தன் சொந்த அண்ணன் , தம்பியை அப்பட்டமாக படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டி கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஒளரங்கஜேப் பற்றி சொல்லிவரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஒளரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதிப்பவரா? காதலிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகல் தந்தவரா? இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று ஆதாரங்களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் செ.திவான். மிகச் சிறந்த வரலாறு ஆய்வாளரான் செ. திவான், ஒளரங்கஜேப் எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழி விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவே வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப்