இதுவரை யாராலும் முயற்சி செய்யப்படாத ஒன்றன வரலாற்றுக் கொள்கையில் அகராதி/சொல்லடைவு ஒன்றை வெளிக்கொணர வேண்டும் என்ற தன்னேரில்லாத தமிழறிஞர்களின் அறிவையும் ஊக்கமும் அமரர்.திரு.சா.இராஜம் அவர்களை இப்பணியில் ஈடுபடத் தீர்மானிக்கச் செய்தன.அனைத்து தமிழ் இலக்கியங்களையும் கி.பி.1400-1600 வரையிலான கல்வெட்டுகளையும் சேகரித்தார்.அதுவரை கிடைத்துள்ள தமிழிலக்கியங்களில் சொல்லடைவுகள் தொகுக்கப் பெற்றன.8000 கல்வெட்டுகள் பிரதி எடுக்கப்பட்டன.வரலாற்று முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டன.பிறமொழி எழுத்துகளில் எழுதப் பெற உண்மையான முழுமையான தமிழ் நூல்களில் உள்ள சொற்கள் தமிழில் எழுதப்பட்டன.விளக்கவுரைகளைக் கொண்ட மணிப் பிரவாள இலக்கியங்களும் வைணவப் பெருநூல்களும் கையெழுத்துப் பிரதியாக 132 தொகுதிகளாக அகர அடைவு செய்யப்பெற்றன.கி.பி.1600 வரையுள்ள அனைத்து இலக்கியங்களின் சொல்லடைவுகளும் கையெழுத்துப் பிரதி வடிவத்தில் 246 தொகுதிகளாகத் தயாரிக்கப் பெற்றுள்ளன.
அவர் நிறுவிய சாந்தி சாதனா நிறுவனம் வரலாற்றுக் கொள்கையின் அடிப்படையில் தமிழ் அகராதி அட்டவணையை விரைவில் பதிப்பித்து வெளியிடுவதன் மூலம் தமிழ்ப் பேரறிஞர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் பெரிதும் உதவியாயிருக்குமென்று நம்புகிறது.