நூலின் பெயர் :விடுதலைப் புலிகளுக்கு அப்பால்
ஆசிரியர் பெயர் :ராஜீவ் சர்மா
தொகுப்பு : ஆனந்தராஜ்
புத்தகத்தை பற்றி
ராஜீவ் காந்தி படுகொலைக்கும், விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களுக்கும் என்ன தொடர்பு? இந்த விஷயத்தில் புலிகள் படுகொலைத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்டார்களா? இல்லை கூலிப்படை போல மூன்றாவது நாடு அல்லது அமைப்பின் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார்களா? ராஜீவ் காந்தியைக் கொல்வதன் மூலமாக இந்தியாவுடன் மிகப்பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பது கூடத் தெரியாதவரா பிரபாகரன்? அப்படியும் அவர் இதைச் செய்ய என்ன காரணம்? இந்திய அமைதிப்படை முற்றிலுமாக வெளியேறிய பிறகு, பதவி ஏற்ற பிரேமதாசா அரசு, புலிகளோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில்தான் புலிகள் பெரிய அளவில் ஆயுதக் கொள்முதல் செய்தார்கள். அதற்கு என்ன தேவை? 93ல் புலிகளின் தற்கொலைப் படையினரால் பிரேமதாசா கொல்லப்பட்டார். ராஜீவ் கொலைக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
மேலும், தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ராஜேந்திர ஜெயின், நீதிபதி ஜெயின் கமிஷன் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கவிருந்த நாளுக்கு முந்தைய தினம் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவரது மரணம் குறித்து முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளியே கொண்டுவரப்படவில்லை.
ராஜீவ் காந்திக்கு நிகழ்ந்தது ஏதோவொரு கொலை என மட்டுமே பரப்பப்பட்டு அகோனத்திலையே திரும்ப திரும்ப பேசியே இறுதியில் பழிவாங்குதல் வரை சென்றது. ஆனால், இது தனி நபர் விருப்பு வெறுப்பு சார்ந்த பழிவாங்குதல் என்கிற புரிதல் மட்டுமே ஏற்படுத்த பட்டுள்ள சூழ்நிலையில், முற்றிலும் புதிதாக வேறு ஒரு கோணத்தில் இப்புத்தகம் ஒரு இது ஒரு அரசியல் படுகொலை என காரண காரியங்களோடு விளக்குகிறது.
Book Name : viduthalai pulikalukku appal
Book writer : raajiv sarmaa
Translator :Anantharaj