திரைக்கதை எழுதிப் பயிற்சிபெற எளிய வழி ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தில் சில மாறுதல்களைச் செய்து எழூதிப் பார்ப்பதுதான். ‘மூணு’ படத்தில் நாயகனுக்கு மன நோய் இருக்கும்.அதுவே நாயகிக்கு இருந்தால்..?(இல்லாள்).
‘காதல்’ படத்தில் நாயகனுக்கு மனநிலை கலங்கிவிடும்.நாயகியும் அவளுடைய புதிய கண்வனும் அவனைத் தங்கள் பராமரிப்பில் பார்த்துக்கொள்வார்கள்.நாயகனுக்கு நினைவு திரும்பிவிட்டால்..?(காதல்-2).
‘முதல்வன்’ படத்தில் அர்ஜூனுக்கு த்டீர் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்ததுபோல் வடிவேலுக்கு கிடைத்தால்..? (வட்டச் செயலாளர் வண்டு முருகன்).
‘நண்பன்’ படத்தில் விஜய் புத்திசாலி மாணவராக இருப்பார்.அவர் ஆசிரியரானால்..அந்த வேடத்தை ஜோதிகா/ஸ்ரீதேவி நடித்தால்..? (சரஸ்வதி மேரி டீச்சர்).
-இப்படியாக,பார்த்த திரைப்படங்களில் இருந்து பார்க்கப்போகிற திரைப்படங்களை இந்தப் புத்தகத்தில் உருவாக்கியிருக்கிறேன்.தேர்ந்த சிற்பிக்கு வெறும் கல்லைப் பார்த்தாலே அதில் மறைந்திருக்கும் சிலையைக் கண்டுபிடித்துவிட முடியும்.இந்தப் புத்தகமோ கல்லில் சிலையை வரைந்தே காட்டியிருக்கிறது.செதுக்க வேண்டியதுமட்டுமே பாக்கி.
நான் ரெடி..நாளைய இயக்குநர்களே நீங்க ரெடியா?