Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

யாழ்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்!

(0)
yazhpana samuga uruvakkamum vibulanantharum
Price: 50.00

Weight
150.00 gms

யாழ்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்!

 

யாழ்ப்பாண சமூக உருவாக்கத்தில் விபுலானந்தரின் பங்கு (1920களில்) என்ற இச்சிறுநூல் எழுநாவின் விசேட வெளியீட்டுத் திட்டங்களில் ஒன்றாகிய மீள்வெளியீடுகள் என்னும் பிரிவின் கீழ் வெளியாகின்றது. முதல்பதிப்பு வெளியாகிய காலப்பகுதி, தமிழ் அரசியலில் ஆசிரியரின் பங்களிப்பு, தமிழ் அரசியல் இன்று வந்தடைந்திருக்கும் இடம், தமிழ் அரசியலின் இன்றைய போக்கு போன்ற பல காரணிகள் இந்நூல் மீள்பதிப்பிக்கப்படுவதற்கான காரணிகளாகின்றன.

 

இந்நூல் வெளியாகிய காலப்பகுதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நூலாசிரியரின் பாத்திரத்தையும் சற்று விரிவாகப்பார்க்க வேண்டியுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு போராட்ட சக்திகள் களத்திலிருந்து அகற்றப்பட்டு புலிகள் தமது நடைமுறை அரசுக்கான தயார்ப்படுத்தலை மேற்கொண்டிருந்த காலப்பகுதியில் தீவிர இடதுசாரிப் பின்புலத்திலிருந்த கௌரிகாந்தன் அவர்களால் இந்நூல் எழுதப்பட்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இடதுசாரிச் செயற்பாட்டாளராக தனது பயணத்தைத் தொடங்கிய கௌரிகாந்தன் இரண்டாம் தலைமுறை இயக்கத்தில் ஒன்றான கீழைக்காற்று இயக்கத்தில் முக்கிய பங்காற்ரியவர். அதன் தொடர்ச்சியில் தேசியவாத இயக்கமொன்றிலும் முக்கிய பொறுப்பில் செயற்பட்டுள்ளார். புலிகள் இயக்க காலப்பகுதியில் மக்கள் இயக்கச் செயற்பாடுகளில், முக்கியமாக மாணவ அமைப்புக்கள் சார் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.