Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஏழு தமிழர் விடுதலை

(0)
yezhu thamizhar viduthalai
Price: 75.00

Weight
180.00 gms

மக்கள் சமூகத்தோடு ஒன்று கலந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் ஓர் மனிதன் திருந்துவதற்கான வாய்ப்பையும் அடைகிறோம் என்பதே பொருள்.

எனவே எந்த நிலையிலும் தண்டனை குறைப்புக்கான வாய்ப்பை அடைத்துவிடுவது மனிதனிலிருந்து மனித தன்மையை அகற்றும் செயலாகும்.இது குற்றங்களைக் கூட்டுமே தவிர குற்றவாளிகளைக் குறைத்துவிடாது.

மொத்தத்தில் இத்தீர்ப்பு உச்சநீதிமன்றமே செய்திருக்கும் அரசமைப்புச்சட்ட கவிழ்ப்பு ஆகும்.

ஆயினும் அரசமைப்புச்சட்ட உறுப்பு 161ன் கீழ் ஆளுநருக்கு அதாவது மாநில அரசுக்கு உள்ள கருணை வழங்கும் அதிகாரம் தடை செய்யப்பட முடியாது,நீதி மன்றக் குறுக்கீட்டிற்கு அப்பாற்பட்டது என இத்தீர்ப்பு கூறியருப்பது ஆறுதல் அளிக்கிற செய்தியாகும்.

இந்த நிலையில் தமிழக அரசு கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  1. அரசமைப்பு உறுப்பு 161ன் கீழ் தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுநர் வழியாக ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.
  2. அதற்கு இடையில் உடனடியாக முருகன்,சாந்தன்,பேரறிவாளன்,நளினி,செயக்குமார்,இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களுக்கு நீண்டகால விடுப்பு (பரோல்) வழங்கி இடைக்கால விடுதலை அளிக்க வேண்டும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.