"குழந்தைகளைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று தன் மார்பில் குழந்தையை அணைத்துக்
கொண்டிருந்த பெண்ணொருத்தி கேட்டாள்.
அவர் சொன்னார்:
"உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள், வாழ்க்கை தமக்கென்று வேண்டிய
குழந்தைகள். அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்; உங்களிடமிருந்தல்ல. அவர்கள்
உங்களுடன் இருந்தாலும், உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.
உங்கள் அன்பை அவர்களுக்கு நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல. அவர்களுக்கென்று
தனிச் சிந்தனைகள் உண்டு. அவர்களின் உடல்களுக்குத்தான் நீங்கள் பாதுகாப்புத் தரமுடியும்,
ஆன்மாக்களுக்கல்ல.
அவர்களின் ஆன்மாக்கள், நாளைய வீட்டில் வாழ்பவை. அங்கே, நீங்கள் செல்லமுடியாது, உங்கள் கனவிலும்கூட. அவர்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், அவர்களை உங்களைப் போல் ஆக்கிவிடாதீர்கள்.”
No product review yet. Be the first to review this product.