என்.கணேசனின் அனைத்து சிறுகதைகளிலும் மானுடமே அடித்தள நாதமாக உள்ளது. மனிதனின் உயர்குணங்களே சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன.அன்பு, காதல், கருணை, மன்னிப்பு, பெருந்தன்மை, வாழும் கலை, அறிவுபூர்வமான அணுகுமுறை ஆகியவையே கருவாகவும், படமாகவும் அமைந்திருக்கின்றன.