1969 தொடங்கி எழுபதுகளில் தமிழ் இலக்கிய உலகில் தனித் தடம் பதித்து தனக்கென ஓர் இடத்தையும் வைத்துக் கொண்டது, “கண்ணதாசன் மாத இலக்கிய இதழ்”
புதிய எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை அரங்கேற்ற ஒரு தளமாகியது.நூற்றுக்கணக்கான வெளியே தெரியாத இலக்கியக் கர்த்தாக்களை உலகிற்கு அடையாளம் காண்பித்தது.கவியரசரும் தனது இதழுக்கென தனியாக பக்கங்கள் வைத்து எழுதினார்.
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”. கவியரசரது வரிகள் சத்தியவாக்காக ஒலிக்கிறது!